search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தண்ணீர் பந்தல்"

    • பொதுமக்களுக்கு கோடை கால தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.
    • நிகழ்வில் வார்டு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    பொன்னேரி:

    தமிழகத்தில் கோடை வெயில் சுட்டேரிக்கும் நிலையில் பொது மக்களின் தண்ணீர் தாகம் தீர்க்க பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மீஞ்சூர் பேரூராட்சி சார்பில் மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ் செயல் அலுவலர் வெற்றி அரசு வழிகாட்டுதலின் பேரில் பொதுமக்களுக்கு கோடை கால தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது. பேரூராட்சி அலுவலகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் பந்தல் திறக்கபட்டன இதனை மீஞ்சூர் பேரூராட்சி துணை தலைவர் அலெக்சாண்டர் துவக்கி வைத்தார். இதில் வார்டு உறுப்பினர்கள் அபுபக்கர், பாஸ்கர், ஜெயலட்சுமி தன்ராஜ், கவிதா சங்கர், சங்கீதா சேகர், ஜெயசங்கர், சுகண்யா, வெங்கடேசன், சுகாதார மேற்பார்வையாளர் கோபி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • கதிர் ஆனந்த் எம்.பி. திறந்து வைத்தார்
    • குளிர்பானம் மற்றும் மோர் வழங்கினார்

    வேலூர்:

    காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் துணை மேயர் சுனில் குமார் சார்பில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி இன்று நடந்தது.

    இந்த நிகழ்ச்சிக்கு துணை மேயர் சுனில் குமார் தலைமை தாங்கினார். கதிர் ஆனந்த் எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

    பின்னர் பொது மக்களுக்கு ஆப்பிள், திராட்சை, தர்பூசணி, இளநீர், குளிர்பானம் மற்றும் மோர் வழங்கினார். 

    • நிகழ்ச்சிக்கு மாநகர துணைச் செயலாளர் கீதாமுருகேசன் தலைமை தாங்கினார்.
    • கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் பொது மக்களுக்கு இளநீர், தர்பூசணி வழங்கினர்.

    தூத்துக்குடி:

    தி.மு.க. தலைவரும், முதல்- அமைச்சருமான மு.க.ஸ்டாலின் கோடை காலத்தை முன்னிட்டு தண்ணீர் பந்தல் திறக்க வேண்டும் என்று உத்தர விட்டிருந்தார். அதன்படி வடக்கு மாவட்ட தி.மு.க.விற்குட்பட்ட பகுதி முழுவதும் தண்ணீர் பந்தல் தொடர்ந்து திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு நீர்,மோர் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் 14-வது வார்டுக்குட்பட்ட சின்னக்கண்ணுபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாநகர துணைச் செயலாளரும், மாநகராட்சி பணிக்குழு தலைவருமான கீதாமுருகேசன் தலைமை தாங்கினார். தண்ணீர் பந்தலை தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலா ளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி திறந்து வைத்து பொது மக்க ளுக்கு இளநீர், தர்பூசணி, நுங்கு, அன்னாசி பழம், மோர் மற்றும் பல்வேறு வகையான குளிர்பா னங்களை வழங்கி னார்கள்.

    நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி தெற்கு மண்டலத் தலைவர் வக்கீல் பாலகுருசாமி, மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், வட்டப் பிரதிநிதி பாஸ்கர் மற்றும் மணி, காசிராஜன், அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தா.பழுர் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் கோடைகால தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது
    • தொடர்ந்து அனைகுடம், சோழமாதேவி, கோடாலி, கருப்பூர் உள்ளிட்ட கிராமங்களிலும் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தா.பழூர் தி.மு.க கிழக்கு ஒன்றியம் சார்பாக சிலால் சாலையில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கொடியேற்றி கோடைகால தண்ணீர் பந்தலை கழக கொள்கை பரப்புச் செயலாளர் சபாபதி மோகன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் சட்ட மன்ற உறுப்பினர் கண்ணன் கலந்து கொண்டார். தொடர்ந்து அனைகுடம், சோழமாதேவி, கோடாலி, கருப்பூர் உள்ளிட்ட கிராமங்களிலும் தண்ணீர் பந்தல் திறந்து வைத்தார். மேலும் வெயிலின் தாக்கத்தினால் பொதுமக்களுக்கு மோர், இளநீர், தர்பூசணி உள்ளிட்டவை வழங்கப்பட்டது. இதில் சிலால் ஊராட்சி மன்ற தலைவர் சத்யராஜ் மற்றும் தா.பழுர் ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழக மக்களின் தாகம் தீர்க்கும் வகையில் தமிழக முழுவதும் நீர்மோர் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு வருகிறது.
    • ஒரு பகுதியாக கடத்தூர் கிழக்கு ஒன்றியம் சார்பில் ஒடசல்பட்டி கூட்ரோடு பகுதியில் திறக்கப்பட்டது.

    கடத்தூர்,

    தருமபுரி மாவட்டம், கடத்தூர் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க சார்பில், முன்னாள் முதல்- அமைச்சரும், கழகப் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியின் உத்தரவுபடி, கோடை காலத்தில் தமிழக மக்களின் தாகம் தீர்க்கும் வகையில் தமிழக முழுவதும் நீர்மோர் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக கடத்தூர் கிழக்கு ஒன்றியம் சார்பில் ஒடசல்பட்டி கூட்ரோடு பகுதியில் திறக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் மதிவாணன் தலைைமை தாங்கினார்.

    முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்.

    இதில் பாப்பிரெட்டிப்பட்டி எம்.எல்.ஏ கோவிந்தசாமி, பொது குழு உறுப்பினர் துரை, மாவட்ட கவுன்சிலர் தனபால், சே ர்மேன் உதயா, துணைசேர்மேன் தசத்திவேல், ஒன்றிய துணை செயலாளர் ரவீந்திரன், மாவட்ட பிரதிநிதி சக்திவேல், முன்னாள் நகர செயலாலர் சசிகுமார், ஒடசல்பட்டி, புதூர், கிளை பொறுப்பாளர்கள் சக்திவேல், மணி உள்ளிட்ட ஏராளமானோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    • பெரம்பலூர் புது பஸ் ஸ்டாண்டு அருகே காவல்துறை சார்பில் கோடைக்கால தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது
    • தண்ணீர் பந்தலை மாவட்ட போலீஸ் எஸ்.பி. ஷ்யாம்ளாதேவி திறந்து வைத்தார்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் புது பஸ் ஸ்டாண்டில் காவல்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள கோடைக்கால தண்ணீர் பந்தலை மாவட்ட போலீஸ் எஸ்.பி. ஷ்யாம்ளாதேவி திறந்து வைத்தார். அதன் பின்னர் அவர் பேசும்போது, பெரம்பலூர் மாவட்டத்தில் கோடை காலம் தொடங்கி விட்ட நிலையில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்வதற்காக பொதுமக்கள் கிராமத்திலிருந்து நகரத்திற்கு வந்து செல்கிறார்கள்.

    பொது மக்கள் அதிகம் வந்து செல்லும் இடங்களில் முக்கியமான இடமாக உள்ள பகுதிகளில் கோடையின் தாக்கத்தினால் ஏற்படும் தாகத்தை தணிக்கும் வகையில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கப்படுகிறது என தெரிவித்தார். பின்னர் பொதுமக்களுக்கு நீர் மோரினை எஸ்.பி. வழங்கினார். நிகழ்ச்சியில் ஏ.டி.எஸ்.பி. மதியழகன், டி.எஸ்.பி. பழனிச்சாமி, இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் எஸ்.ஐ.க்கள், போலீசார், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • இளம்பெண்கள் பாசறை சார்பில், நேற்று தண்ணீர்பந்தல் திறந்து வைக்கப்பட்டது.
    • பொதுமக்களுக்கு குடிநீர், நீர்மோர், பானகம், இளநீர், தர்பூசணி பழம், வெள்ளரி பிஞ்சு ஆகியவற்றை வழங்கினார்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில், நேற்று தண்ணீர்பந்தல் திறந்து வைக்கப்பட்டது.

    ஓசூர் பஸ் நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் ராமு தலைமை தாங்கினார்.

    இதில், மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டி கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி, தண்ணீர் பந்தலை திறந்துவைத்து பொதுமக்களுக்கு குடிநீர், நீர்மோர், பானகம், இளநீர், தர்பூசணி பழம், வெள்ளரி பிஞ்சு ஆகியவற்றை வழங்கினார்.

    இதில், மாநகர பகுதி செயலாளர்கள் அசோகா, ராஜி, , மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் சாச்சு என்ற அயாஸ்கான், மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள், கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

    • தாகத்தை போக்கும் வகையில் கிருஷ்ணகிரி நகரில் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
    • நகர தி.மு.க. சார்பில் கிருஷ்ணகிரி பழையபேட்டை ஆட்டோ ஸ்டேண்ட், 5 ரோடு ரவுண்டானா அண்ணா சிலை, மாவட்ட பதிவாளர் அலுவவகம், ராசி வீதி ஆகிய 4 இடங்களில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது.

    கிருஷ்ணகிரி,

    தமிழக முதல்- அமைச்சரும், தி.மு.க. தலைவரு மான மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, கோடை காலத்தில் பொதுமக்களின் தாகத்தை போக்கும் வகையில் கிருஷ்ணகிரி நகரில் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.

    நகர தி.மு.க. சார்பில் கிருஷ்ணகிரி பழையபேட்டை ஆட்டோ ஸ்டேண்ட், 5 ரோடு ரவுண்டானா அண்ணா சிலை, மாவட்ட பதிவாளர் அலுவவகம், ராசி வீதி ஆகிய 4 இடங்களில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் நவாப் தலைமை தாங்கினார். நகராட்சி தலைவர் பரிதாநவாப் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., பங்கேற்று, பொதுமக்கள், நீர்மோர், தர்பூசணி பழம், முலாம் பழம், பழசரசங்கள், வாழைப்பழங்கள் உள்ளிட்டவற்றை வழங்கினர்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ், மாவட்ட துணை செயலாளர் கோவிந்தசாமி, சாவித்திரி கடலரசுமூர்த்தி, மாவடட பொருளாளர் கதிரவன், பொதுக்குழு உறுப்பினர் அஸ்லம், தி.மு.க. நிர்வாகிகள் அன்பரசன், வக்கீல் மதியழகன் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள், தி.மு.க. பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    • மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தண்ணீர் பந்தலை திறக்க முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சியினருக்கு உத்தரவு விட்டார்.
    • தாகத்தை தீர்க்கும் நீர்மோர், தர்பூசணி, இளநீர் அடங்கிய தண்ணீர் பந்தலை கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி திறந்து வைத்தார்.

    தருமபுரி,

    கோடை காலம் தொடங்கியதால் பொது வெளியில் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் மக்கள் திணறி வருகின்றனர். வெப்பத்தை சமாளிக்கும் வகையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஆங்காங்கே தண்ணீர் பந்தலை திறக்க வேண்டும் என தி.மு.க தலைவரும், முதல் அமைச்சருமான மு.க.ஸ்டாலின் கட்சியினருக்கு உத்தரவு விட்டார்.

    இதனையடுத்து தருமபுரி கிழக்கு மாவட்ட நகர தி.மு.க. சார்பில் நகர செயலாளர் நாட்டான் மாது ஏற்பாட்டில் தருமபுரி பஸ் நிலையம் அருகே தாகத்தை தீர்க்கும் நீர்மோர், தர்பூசணி, இளநீர் அடங்கிய தண்ணீர் பந்தலை கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி திறந்து வைத்து பொதுமக்களுக்கு வழங்கினார். அதனையடுத்து தருமபுரி நகராட்சி அலுவலகம் முன் நகர மன்ற தலைவர் லட்சுமி மாது தலைமையில் தண்ணீர்பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு வழங்கினார்.

    இந்நிகழ்வில் நகர மன்ற தலைவர் லட்சுமி மாது பொருளாளர் தங்கமணி, ஒன்றிய செயலாளர்கள் வைகுந்தம், மல்லமுத்து, மாவட்ட துணை செயலாளர் ரேணுகாதேவி மற்றும் தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.

    • த.மு.மு.க. சார்பில் கல்வி-மருத்துவ உதவி வழங்கும் விழா நடந்தது.
    • கண் அறுவை சிகிச்சைக்கு ரூ. 20 ஆயிரம் மருத்துவ உதவியும் வழங்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    த.மு.மு.க. 28-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் நகர் த.மு.மு.க. சார்பில் கல்வி மற்றும் மருத்துவ உதவித்தொகை வழங்கும் விழா த.மு.மு.க. நகர் தலைவர் முஹம்மது அமின் தலைமையில் நடந்தது.

    மாநில செயலாளர் சலிமுல்லாஹ்கான், மாநில செயற்குழு உறுப்பினர் மவுலவி உசேன் மன்பஈ முன்னிலை வகித்தனர். விழாவில் 2-ம் ஆண்டு கல்வி உதவி தொகையாக உயர் கல்வி பயிலும் மாணவர்கள் அப்துல்லா, முருகன், ரபிக் ராஜா, சைரோஸ் ஆகிய 4 மாணவர்களுக்கு தலா ரூ 7 ஆயித்து 500 வீதம் ரூ.30 ஆயிரம் வழங்கப்பட்டது. ஜக்கரியா என்ற தொழிலாளிக்கு கண் அறுவை சிகிச்சைக்கு ரூ. 20 ஆயிரம் மருத்துவ உதவியும், ராமநாதபுரம் அருகே லாந்தை சவுந்தரபாண்டி என்ற மாற்றுத் திறனாளிகளிக்கு சிறு தொழில் தொடங்க ரூ.3 ஆயிரம் வழங்கப்பட்டது.

    முன்னதாக மாநில செயலாளர் சலிமுல்லாஹ்கான் த.மு.மு.க. கொடியேற்றி வைத்தார். த.மு.மு.க. மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம், 15-வது வார்டு ம.ம.க. நகர் மன்ற உறுப்பினர் காதர் பிச்சை, வர்த்தக அணி மாவட்ட செயலாளர் பிரிமியர் இப்ராஹிம், மாவட்ட துணை செயலாளர் சாகுல் ஹமீது, ம.ம.க. மாவட்ட துணைச் செயலாளர் ஜாகீர் பாபு, மருத்துவ அனி மாவட்ட செயலாளர் சுலைமான் உள்பட பலர் கலந்து கொண்டனர். கீழக்கரையில் த.மு.மு.க. 28-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பல்வேறு முக்கிய சாலைகளில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது.

    ×